18 Jul 2015

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குப் பஞ்சமிருக்காது – ஜனா

SHARE

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குப் பஞ்சமிருக்காது என்பது பொதுவான கருத்து. இது உண்மையோ என்னவோ மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் வேட்பாளர் தெரிவுகள், தலைமை வேட்பாளர் தெரிவுகள் தொடர்பாக நோக்கும் போது இது அப்பட்டமான உண்மைபோலத் தான் தெரிகின்றது. இங்கு ஏமாறுபவர்களாக எம்மினம் இருப்பது தான் பரிதாபம்.

ஏன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மகிளுரமுனைக் கிராம மக்களுடனான சந்திப்பொன்று வெள்ளிக் கிழமை  (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் யொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்
இன விகிதாசாரப் படியும், வாக்காளர் விகிதாசாரப் படியும் பெரும்பான்மையினர் தமிழர்கள். குறிப்பாக 74 வீதத்திற்க்கு மேல் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் பட்டியலில் 4 தமிழ் வேட்பாளர்கள், 4 முஸ்லிம் வேட்பாளர்கள், உள்ளடக்கப் பட்டுள்ளார்கள். இதேபோல பொதுஜன ஐக்கிய முன்னனியில் 5 தமிழர்கள், 3 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக  உள்ளடக்கப் பட்டுள்ளார்கள். இத்தனைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் வேட்பாளர்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரும்  பொதுஜன ஐக்கிய முன்னனியின் தமிழ் வேட்பாளரில்  ஒருவர் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் போன்ற பெருமையும் மதிப்புக் கொண்ட பிரமுகர்களை தம் வேட்பாளர்களாக இணைத்த பேரினவாதக் கட்சிகள் தலைமை வேட்பாளர்களாகும் தகுதி இவர்களுக்கு இல்லை என்றோ அல்லது இவர்கள் வெறும் போடுகாய்கள் என்றோ அல்லது நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில்  வெறும் அள்ளக்கைகளாக கருதியதாலோ அல்லது தமிழர் வாக்குகளைப் பெறும் தகுதி அற்றவர்கள். ஆனால் தமிழர்கள் தமது பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளார்கள்  என்பதை வெளியுலகுக்கு காட்ட வேண்டும். என்பதற்காக இணைக்கப்பட்டார்களோ? என்று தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.


ஏனெனில் பேரினவாதக் கட்சிகள் இரண்டுமே தம் பட்டியலின் தலைமை வேட்பாளர்களாக மாவட்டத்தில் 24 வீதம் மக்களைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளையே நியமித்துள்ளார்கள். இதிலிருந்து தெரிகின்றது இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்த பேரினவாதிகளும் மற்றவர்களும் தமிழர்களை மதிக்கும் இலட்சணம். இந்த இலச்சணத்தில் தொடர்பு சாதனங்கள் முன் இவர்கள் தோன்றி மகத்தான வெற்றி பெறுவோம் என்று மார் தட்டுகின்றார்கள். இவர்கள் யாருக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை எம்மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள். இவர்களை தம் பட்டியலில் இணைத்த பேரினவாதிகளதும் ஏனையவர்களதும் நோக்கம் ஏதோ ஒன்றோ, இரண்டோ அல்லது ஒன்பதோ, பத்தோ எடுக்கும் வாக்குகள் தமிழர்களின் வாக்கை சிதைக்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மறுபுறம் இந்த வாக்குகள் மூலம் இவர்களது கட்சி வாக்குகள் உயரும் இதன் மூலம் தமது பிரதிநிதித்துவம் கூடும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளர் தெரிவு அவர்களது அதி புத்திசாலித் தனத்தையும் தமது இன பிரதிநிதிகளை உயர்வாகப்பெறும் கபட நோக்கத்தையும் அப்பட்டமாக  காட்டி நிற்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் தமிழர் வாக்குகள் மூலம் இருகட்சிகளிலும் தமிழர் அல்லாத இருவர் தெரிவு செய்யப்படும் விதமாக நுட்பமாக திட்டமிட்டுள்ளார்கள். இப்படியலில் உள்ள தமிழர்கள் வாக்குசேகரித்து வழங்கும்  இயந்திரங்களாக மட்டுமே  இருப்பார்கள். தேர்தல் முடிந்ததும் கறிவேப்பிலைக்கு இருக்கும் மரியாதை கூட அகட்கட்சிகளிலிலிருக்கும், தமிழ் வேட்பாளர்களுக்கு, கிடைக்காது என்பதைதான் தேர்தல் முடிவின் பின்னரான நிதர்சனமாகும். என அவர் தெரிவித்தார். 






SHARE

Author: verified_user

0 Comments: