எனவே இனிமேல் எமது பிரதேசத்திலிருந்து எந்தப் பெண்ணும் வெளிநாடுகளில் கையேந்தாமல், சுயதொழில்களிலும், குழுவான செயற்றிட்டங்களிலும், ஈ:டுபட வேண்டும். இவைகளனைத்திற்கும், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதிவுப் பற்று பிரதேசத்தின் மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஆரம்ப விழா போரதீவுப் பற்று பிரதேசத்தின் தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலைத்தில் இன்று செவ்வாய் கிழமை (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட கால் நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப் படுகின்ற அமுதசுரபி பால் பதநிடும் நிலையத்தில் கடமை புரிகின்ற இளைஞர் யுவதிகளை கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ளீர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய, கால்நடை, அமைச்சராக இருந்த தற்போதைய கிழக்கு முதலமைச்சர் ஏறாவூரில் பால் நிலையத்தில் கடைமை புரிகின்ற இளைஞர் யுவதிகளை கிழக்கு மாகாணசபையின்கீழ் உள்ளீர்ப்புச் செய்து நிரந்தரமாக்கியுள்ளார்.
அதுபோல் தும்பங்கேணியில் அமைந்துள்ள அதுதசுரபி பால் பதநிடும் நிலையத்தில் கடமை புரிகின்ற இளைஞர் யுவதிகளையும் கிழக்கு மாகாகண சபையின் கீழ் உள்ளீர்ப்புச் செய்ய தற்போதைய கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றினை விட எமது பிரதேசத்தில் தொண்டர் அடிப்படையில் அடிப்படையில் கடமை புரிகின்ற இளைஞர் யுவதிகளை மாகாண சபையின் கீழ் உள்ளீர்ப்புச் செய்ய தற்போதைய கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது பிரதேத்தில் பெறுகின்ற பால் அனைத்தையும் கொள்வனவு செய்து பால் உற்பத்திப் பொருட்களை, அதிகரிக்க வேண்டும். இதன்மூலம், வெளிஇடங்களிலிருந்து வரும் எமது பிரதேசத்திற்கு வரும் பால் உற்பத்திப் பொருட்களைக் குறைக்க வேண்டும்.
எமது பிரதேசத்திலுள்ள பல பெண்கள் வெளிநாட்டு முகவர்களுடாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவே எமது பிரதேசத்திலுள்ள வளங்களை நூற்றுக்கு நூறுவீதம் பயன்படுத்தி எமது பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கும், குறிப்பாக விதவைகளுக்கும், பெண்களுக்கும், வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். எனவே எமது மக்கள் வெளிநாடுளின் மேலாதிக்கத் தன்மைக்கு ஆளாகிவிடக் கூடாது.
எனவே இனிமேல் எமது பிரதேசத்திலிருந்து எந்தப் பெண்ணும் வெளிநாடுகளில் கையேந்தாமல், சுயதொழில்களிலும், குழுவான செயற்றிட்டங்களிலும், ஈ:டுபட வேண்டும். இவைகளனைத்திற்கும், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment