மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதிவுப் பற்று பிரதேசத்தின் மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஆரம்ப விழா போரதீவுப் பற்று பிரதேசத்தின் தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலைத்தில் நடைபெற்றது.
மேற்படி சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர், கி.துரைராசசிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மற்றும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையார் எஸ்.கிருபைராசசிங்கம், உட்பட போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment