15 Jun 2015

இந்த அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாக சில செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது – அரியநேத்திரன்.

SHARE

தற்பேதைய அரசாங்கதின் நல்லாட்சி எனும்போது… 100 நாட்களை மையப் படுத்தித்தான் அவர்களின் தேர்த்தல் விஞ்ஞாபனம் இருந்தது. தற்போது 140யும் நாட்களைத் தாண்டிச் செல்கின்றது. இதில் வடக்கு கிழக்கு மக்கள் நல்லாட்சி என்று பார்க்கக் கூடியது என்னவெனில் சுதந்திரமாக சில செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் இச்செயற்பாடுகள் நடாத்த முடியாதிருந்தன. உதாரணமாக புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி சுதந்திரமாக போராட்டங்களை நடாத்தக் கூடிய நிலையுள்ளது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனிர் பா.அதியநேத்திரன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தின்கீழ ஏற்பட்டுள்ள நல்லாட்சி எவ்வாறு செல்கிறது என மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிகையில்….. 


இந்த அரசதாங்த்திலிருந்து தமிழ் மக்கள் எதிர் பர்த்த கைத்திகள் விடுதலை இன்னும் மேற்கொள்ளப் படவில்லை அது ஒரு வேதனையான விடையமாகும். அதேவேளை காணி விடுவிப்பு. தொடர்பில் மஹிந்த அரசு காட்டிய இழுத்தடிப்பை மைத்திரி அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 1000 ஏக்கரும் கிழக்கில் 214 ஏக்கர் காணியும் விடுவிக்கப் பட்டுள்ளன. இது நல்லாட்சியில் காணக்கூடியதாகவுள்ளது. 


ஆனாலும்  தமிழ் மக்க்ள முழுமையாக எதிர் பார்த்த காணாமல் போனோரின் விடையங்கள், சிறையில் வாடும் தமிழ் மக்களும், விடுதலை செய்யப்படவில்லை, என்பன பாரியதொரு வேதனையும், வடகிழக்கு மக்கள் மத்தியில் இந்த நல்லாட்சி பற்றிய அபிப்பிராயம் இருந்து கொண்டிருக்கின்றது. 

ஊழலுக்கு எதிராக பல அரசியல்வாதிகள் கைது செய்யப் பட்டுள்ளார்கள். ஆனாலும் ஊலுக்கு எதிராக கைது செய்யப்பட வேண்டிய பல தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கன்றார்கள். அவர்களுக்கு எதிராகவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: