சட்டம் மற்றும் நம்பிக்கை நித்தியம், மாகாண மட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்கள் கொண்ட வதிவிட சட்ட விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை ஒன்று மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை (13) ஆரம்பமாகியது. இச்செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகலுடன் நிறைவு பெறவுள்ளது.
இதன்போது மனித உரிமைக்கள், மற்றும், ஊடக தொடர்பாடல், என்பவற்றில், ஊடகவியலாளர்களின் பணி, உரிமை அடிப்படையிலான அடிப்படைக் கோட்பாடுகள், சர்வதேச சட்டகம், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள், நடுநிலமைகள் தொடர்பில் அறிக்கையிடலின் தாக்கங்கள், மனித உரிமைகள் பற்றிய உணர்திறனுடனான அறிக்கiயிடல், பால்நிலை பற்றிய உணர்திறனுடனான, அறிக்கையிடல், உரிமை பற்றிய புரிந்துணர்வுடன் கூடிய அறிக்கையிடலில் எமது ஆற்றல்களும் போதாமைகளும், மற்றும், நாடளாவிய ரீதியில், உள்ள உரிமை தொடர்பான பிரச்சனைகள், தொடர்பிலும் விளக்கமளிக்கப்படுகின்றன.
கல்முனை மனித உரிமை அணைக்குழுவின் ஏ.எல்.இஸ்ஸடீன், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன், சட்டத்தரணி கு.ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்குகின்றனர்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த 20 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இச்செயலாமர்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment