16 Jun 2015

களுமுந்தன்வெளிக் கிராமத்திலுள்ள வீடொன்றில் தீ விபத்து…..

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (13) மாலை ஏற்பட்ட தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த விட்டின் ஒரு பகுதியிலிருந்த பொருட்கள் மற்றும் உடமைகள் தீயினால் எரியுண்டுள்ளன.

குறித்த வீட்டின் சுவாமி அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக வீட்டின் உரிமையாளரான நா.லலிதா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது வீட்டின் சுவாமி அறையில் வைக்கப் பட்டிருந்த பெருமளவான உடைகள், பாவனைப் பொருட்கள், மற்றும் பிறின்டர் உட்பட உட்பட சுமார் 150000 ரூபாய் பெறுமதியிலான பொருட்கள், எரியுண்டு நாசமாகியுள்ளதாகவும், இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், வீட்டின் உரிமையாளரான நா.லலிதா மேலும் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: