தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை புனர்வாழ்வு அதிகார சபைக்கு நஸ்ரஈடு பெறுவதற்காக விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் எனவும் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள நிறைவேற்றுச் சபை தயாராகவுள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (13) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பணிப்பாளரிடம் தற்கால அரசின் கீழ் தங்கள் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சம்மந்தமாக வினாவிய போது அதற்கு பதிலளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடையமத் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கiயில்…
பல ஆண்டுகளாக புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருக்கின்றன, அந்தவிண்ணப்பங்களில் பல குறைபாடுகளும் காணப்படுகின்றன இவற்றினை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதில் எவரும் விடுபடக் கூடாது, எனவே உடனடியாக இதுவரையில் புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை 49 டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை பொறளை, கொழும்பு. எனும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
தற்போதைய அரசின் கீழ் புனர்வாழ்வு அதிகார சபையானது புதிய நிருவாகத்துடனும், புத்துணர்வுடனும், ஊக்கத்துடனும் ஒரு அரச நிருவாக ரீதியாக திணைக்கள கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதாவது தற்போதுதான் இந்த அதிகாரசபைக்கு தலைவர், நிறைவேற்றுப் பணிப்பாளர், ஏனைய பதவிகளுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களுக்கு நஸ்ரஈடு கொடுக்கும் நிறுவனமாக இயங்கிய புனர்வாழ்வு அதிகார சபையானது தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல கோணங்களில் உதவிகளை வழங்குவதற்கு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் சுயதொழில் வாய்ப்புக்கள், பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கு விசேட உதவிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான உதவிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு மாறுவாழ்வு அழிப்பதற்கான உதவிகள், யுத்தத்தின் போது காயமடைந்தவர்களுக்கான உதவிகள், தொழிற்சாலைகள் அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கான வங்கிக் கடன் வதியை ஏற்படுத்திக் கொடுத்தல், பாதிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தருக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் வழங்கல் போன்ற உதவி வழங்கும் திட்டங்களே முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக எமது அமைச்சர் சுவாமிநாதன் மற்றும், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜா ஆகியோரும்; இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் மிகவும் அற்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பிவைத்துள்ள விண்ணப்பங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன இதனால் அவர்களுக்குரிய நஸ்ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதில் பலத்த சிக்கல்கள் நிலவுகின்றன எனவேதான் குறைபாடுள்ள கோவைகளை நிவர்த்தி செய்வதற்க்காக கோவைகளை தலமைக் காரியாலயத்தில் இருந்து விண்ணப்பதாரிகளின் காலடிக்கு கொண்டுவந்துள்ளோம். இதற்காகவே நடமாடும் சேவைகளையும் நடாத்தி வருகின்றோம். இதனூடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஸ்ரஈடுகளை துரிதமாக வழங்கமுடியும்.
விண்ணப்பிக்கப்பட விண்ணப்பதாரிகள் பல ஆண்டுகளாகியும் விண்ணப்பதாரிகள் இன்னமும் நஸ்ர ஈடுகளை பெற்றுக் கொள்ள வில்லை பல ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களின் தொடர்புகள் இன்றி விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருக்கின்றன. உதாரணமாக 1991 ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இறந்தவர்களுக்கான விண்ணப்பம் 63000 உள்ளது.
சொத்தளிவுக்காக விண்ணப்பித்த 19000 விண்ணபங்கள் உள்ளன இவ்வாறு பல கோணங்களில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் உள்ளன இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னேடுக்க வேண்டிய தேவை இந்த அதிகாரசபைக்கு எழுந்துள்ளது. இவ் விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment