13 Apr 2015

சித்திரை வருடப் பிறப்புக்காக பொருட்கள் கொள்வனவு செய்யவந்த பொதுமக்கள் விபத்தில் காயம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் எனும் இடத்தில் திங்கட் கிழமை (13) ஏற்பட்ட வாகன விபத்தில் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவிக்கின்னறனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….

நாளை (14)  மலரவுள்ள சித்திரை வருடப் பிறப்புக்காக பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வாழைக்காலை எனும் இடத்திலிருந்து களுவாஞ்சிகு நகர் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று காந்திபுரம் எனும் இடத்தில் வைத்து பேரூந்தின் காற்று வயர் (எயார் கோஸ்) வெடித்துள்ளதில் போரூந்தை சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் குடைசாய்ந்து அருகிலிருந்து பனை மரத்தில் விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 32 பேர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் 15 பேர் தொடர்ந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், 11 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இன்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சென்று பார்த்துள்ளனர்.

 






















SHARE

Author: verified_user

0 Comments: