மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 57 வது ஆண்டு
நிறைவையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு களுதாவளை கிராம பொது
மக்களின் ஆதரவுடனான விளையாட்டு விழா இன்று ஞாயிற்றுக் (12) கிழமை காலை 7
மணியளவில் மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமானது.
இம்மரதன் ஓட்டப்
போட்டியில் முதலிடத்தை த.பவியும், இரண்டாம் இடத்தை க.சந்திரகுமாரும்,
மூன்றாவது இடத்தை ர.நுஜாந்தனும் பெற்றுக் கொண்டனர்.
இதனைத்
தொடர்ந்து களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தொடர் விளையாட்டுக்கள்
சித்திரைப் பத்தாண்டு தினத்தன்று அதாவது எதிர் வரும் 14 ஆம் திகதி 2.30
மணிக்கு கலாசார விளையாட்டுக்கள் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில்
நடைபெறவுள்ளன.
களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர்
த.கோகுலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய
கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
க.சிவநாதன், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், மற்றும்.
சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், சிறைச்சாலை அத்தியட்சகர்
இ.இராஜேஸ்வரன், உட்பட பல உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என பலர்
கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது தலையணைச்சமர், முட்டி உடைத்தல்,
வழுக்கு மரம் ஏறுதல், போன்ற பல கிராமிய, சமூக மட்ட விளையாட்டுப் போட்டிகள்
இடம்பெறவுள்ளதோடு, விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு
பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக களுதாவளை கெனடி விளையாட்டுக்
கழகத்தின் செயலாளர் ப.சுகிர்தன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment