என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை தேசிய அரசியலில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (12) மேற்படி மாகாணசபை உறுப்பினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்தலும் அரச சார்பற்ற அமைப்புக்களினதும் ஏனைய ஒதுக்கீடுகளும் குறைவாகத்தான் உள்ளன. ஆனாலும் இக்காலத்திலாவது எமது பிரதேசத்தில் அ
இந்த நாட்டிலே போராட்டம் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்குரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை, தமிழ் மக்களை அழித்த அரசு வீட்டுக்குச் சென்று தற்போது புதிய அரசு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றிலும் தேசிய அரசும் நிறுவப் பட்டுள்ளது.
இந்நிலையிலும்கூட இலங்கை நாடாளுமன்றில் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவிருக்கும் இவ்வேளையில் சில விசமிகள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு திட்மிட்டு வருகின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை ஏற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அக்கட்சிகளுக்கு அடித்தபடியாக உள்ள எமது தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சிக்குத்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்படல் வேண்டும். அதுவும் எமது தலைவர் இரா.சம்மந்தன்தான் எதிர் கட்சியத் தலைவராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க் கட்சி தலைவராக இருப்பவர் பிரதமராக வரமுடியும். எமது கட்சி சார்ந்தோரால் பிரதமராக வரமுடியா விட்டாலும் பிரதமருக்கு இணையான கருத்துக்களை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல முடியும். ஆனால் இவ்வாறான நிலமை இந்த நாட்டில் தற்போதும்கூட இல்லாமலுள்ளது. இனத் துவேசங்களைக் வெளியிட்டுக் கொண்டிருக்கும் விமல் வீரவம்ச, தினேஸ் குணவர்த்தன, உதயன் கம்மன்வெல போன்றவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர் கட்சி பதவி வரக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தி வருகின்றார்கள்.
எனவே தமிழர்களுக்குள்ளே பல கட்சிகள் இருந்தலும் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இதுபோன்று தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல் கொடுக்க முன்வரவேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
பிவிருத்தி செய்ய வேண்டும் என நினைத்தால் கூட அமைச்சுக்களில் அதற்குரிய ஒதுக்கீடுகள் போதாமலுள்ளமை கவலையளிக்கின்றது.
0 Comments:
Post a Comment