கல்வி, மற்றும் காணி உரிமை ஆகிய இரண்டு விடையங்களையும் முன்வைத்துத்தான் இந்த நாட்டில் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது. எனவே இந்த கல்விக்கும், காணிக்காகவும்தான் எமது கடந்த கால போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்.களுவாஞ்சிகுடி விநாயக வித்தியாலயத்தின் 2013 ஆம், 2014 ஆம் ஆண்டுகளுக்கான பரிசழிப்பு விழா வியாழக்கிழமை (09) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
பாடசாலைகளில் போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்கும்போது மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணரப் படுகின்றன.
கடந்த காலங்களில் எமது மக்கள் யுத்தசூழல் காரணமாக கல்வியில் பின்தள்ளப் படிருந்தார்கள். கடந்த காலங்களில் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகத்தான் தற்போது தமிழர்களின் அதிகார விடையங்கள் குறைந்து கொண்டு செல்கின்றன. எனவே எதிர் காலத்தில் எமது இனத்தின் தலைவிதியையயும், ஏனைய செயற்பாடுகளையும் மேலோங்கச் செய்வதென்பது இன்றய மாணாக்கர்களின் கைகளிலேதான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர் காலத்தில் எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் அது இன்றய சிறார்களின் கல்வி வளர்ச்சியிலேதான் உள்ளது.
கல்விக்காகவும், காணி உரிமை ஆகிய இரண்டு விடையங்களையும் முன்வைத்துத்தான் இந்த நாட்டில் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது. எனவே இந்த கல்விக்கும், காணிக்காகவும்தான் எமது கடந்த கால போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் தமிழ் மக்களை கல்வியில் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டார்கள், எமது தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி பிடித்து வேற்று இனத்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள், இவைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோகக்கத்தில்தான் எமது இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். எனவே இவைகளை முன்நிறுத்தி எமது தற்போதைய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழ்கின்ற எமது தமிழ் தேசிய இனத்தினை அழித்தொழித்த மஹிந்த ராஜபக்ஸ அரசு வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளதனால்தான் இன்று நான்கூட தற்போது கல்விச் சமூகத்தின் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். எனவே தேசிய அரசியலில் மாற்றத்தினைக் கொணர்ந்த எமது மக்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.
மஹிந்த அரசின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்விச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றமுடியாத சூழல் காணப்பட்டது. தற்போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
எனவே எதிர் காலத்திலும் தொடர்ந்து எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே இருப்பார்கள.; எமது மக்கள் அபிவிருத்திகளுக்கும், அபிலாசைகளுக்கும் சோரம்போக மாட்டார்கள். அதுபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் என்றென்றும் எமது இனத்தின் குறை, நிறைகள் தொடர்பில் அரசிற்கு குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி நிருவாகத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இருந்து வந்துள்ளது. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்வி நிருவாகத்தைப் பொறுப்பேற்றுள்ளதனால் கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் எந்தவித அரசியல் பழிவாங்கல்களும் இருக்காது என்பதைக் கூறிக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் த.கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கணிதம், விஞ்ஞானம், சுற்றாடல், தமிழ் தினப்போட்டி, விளையாட்டு, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, போன்ற பல விடையங்களில் திறமைகளை வெளிக்காட்டிய 250 மாணவர்கள் பரில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன், மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment