29 Apr 2015

அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்

SHARE
அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும், அந்த வகையில் இப்பிரதேசத்திற்குபட்ட பெண்களில் பலர் சிறு சிறு, கைத் தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் பல பெண்கள் வீடுகளிலே எதுவித சுயதொழில்களையும் மன்னெடுக்காமல் முடங்கிகி கிடக்கின்றார்கள். இந்த நிலைமை எதிர் காலத்தில், மாற்றமடைய வேண்டும், சுயதொழில்ககளை ஊக்கப்படுத்துவதற்காகவே நாம் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி வக்கிகளினூடாக கடன்களை வழங்கி வருகின்றோம். இக்கடன்களைப் பெற்று இப்பிரதேசத்திலுள்ள மக்கள் சுய தொழில்களை மேற்கொண்டு முன்னேற்றமடைய வேண்டும். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சமூர்த்தி சமாஜத்தின் புதிய நிருவாகிகளைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் திங்கட் கிழமை (27) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

இப்பிரதேசத்தில் மாங்காடு, எருவில், கல்லாறு, ஆகிய இடங்களில் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி வங்கிகளும், களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக வாளாகத்தினுள் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி மகா சங்கமும் அமைந்துள்ளது.

இப்பிரதேசத்தில் 173 சங்கங்களும், 1929 குழுக்களும் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சி நிதியில் 173454456.00 ரூபா மொத்த முதலீடு உள்ளது, 25457 பயனாளிகளுக்கு, 834002900.00 ரூபா சுயதொழில்களுக்காக கடன் வழங்கப் பட்டுள்ளது, இதன் மூலம் கடந்த வருடம் 11027930.86 ரூபாய் இலாம் கிடைத்துள்ளது. 

இதுபோன்று இவ்வருடமும் இப்பிரதேசத்திலுள்ள அனைத்து பயனாளிகளும், சமூர்த்தி வாழ்வின் எழுச்சி வங்கிகளினூடாக கடன்களைப் பெற்று சுயதொழில் களை மேற்கொண்டு முன்னேன்றமடைய வேண்டும்.

எனவே சமூர்த்தி வாழ்வின் எழுச்சியில் இப்பிரதேசத்தில் அதிகளவு பெண்கள்தான் அங்கத்துவம் வகிக்கின்றனர், பெண்கள்தான் குடும்பங்களிலும், கிராம மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும், அபிவிருத்திக்கு முன்னுதாரணமாக விழங்க வேண்டும்.

சேமிப்புப் பழக்கத்தினை தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சேமிப்புக்கள், எதிர் காலத்தில், குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிகும், உந்து சக்தியளிக்கும். என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: