24 Apr 2015

சிவாநந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான அழைப்பு

SHARE
மட்டக்களப்பு - சிவாநந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் 2015.04.26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி தெட்சணாமூர்த்தி சுந்தரேசன் தலைமையில் பாடசாலை வளாகத்திலுள்ள சுவாமி நடராஜாநந்தா மண்டபத்தில் பாடசாலை அதிபரின்; முன்நிலையுடன் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் வளர்ச்சிப்படியில் அங்கு படித்து வெளியேறிய பழைய மாணவர்களின் பங்கு பிரதான இடத்தினைப் பெறுகிறது. எனவே சிவாநந்தியர்களாக இருக்கும்  அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து ஆக்கப+ர்வமான கருத்துக்களைக் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சங்கத்தின் ஆயுள்கால உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளாதவர்கள்  பொதுக்கூட்டத் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பொதுச் செயலாளரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அங்கத்தவராவதற்கான நடமுறையைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நேர முகாமைத்துவத்தை கவனத்திலேற்று உரிய நேரத்திற்கு பொதுக்கூட்டம் ஆரம்பிப்பதை உறுதிப்படுத்துமாறு அனைவரும் வேண்டிக்கொள்ளப் படுகிறார்கள் என மேற்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் த.தினேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு பொதுச் செயலாளர் த.தினேஸ்குமார் - 071 440 2227 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
SHARE

Author: verified_user

0 Comments: