தற்போது நாடாளுமன்றத்தில் நிலவுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் பிரச்சனை ஒரு இன முரண்பாட்டை உண்டுபண்ணுகின்ற, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக வரக்கூடாது என்ற விதத்தில் இலங்கை செயற்பாடுகள்; சென்று கொண்டிருக்கின்ற இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் தருவதற்கு பல முரண்பட்ட கருத்துக்களும், வந்த வண்ணமுள்ளன.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று வியாழக்கிழமை (16) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு என்பது வழுக்குமரத்தில் ஏறுவது போன்று இன்னும் தீர்வு எட்டப் படாமலுள்ளது. இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்காக வேண்டி தமிழ் மக்கள் பல இழப்புக்களை தொடர்ந்தும் இழந்து கொண்டுதான் கிருக்கின்றார்களே தவிர இன்னும் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை.
கடந்த 65 வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பணியும் உர்வதும், தாழ்வதுமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியினை மேற்கொள்ள வேண்டுமாயின் எமது தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ் தமிழ் தேசியத்தின் பால் அணிதிரழ வேண்டும். அவ்வாறு அணிதிரழும் பட்சத்தில் அது தமிழர்கழுக்குரிய தீர்வுக்கு இட்டுச் செல்லும்.
தற்போது நாடாளுமன்றத்தில் நிலவுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் பிரச்சனை ஒரு இன முரண்பாட்டை உண்டுபண்ணுகின்ற, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக வரக்கூடாது என்ற விதத்தில் இலங்கை செயற்பாடுகள்; சென்று கொண்டிருக்கின்ற இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் தருவதற்கு பல முரண்பட்ட கருத்துக்களும், வந்த வண்ணமுள்ளன.
இலங்கை நாடாளுமன்றில் பொதுஜன ஐக்கியமுன்னி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிப்பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 4 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளே 225 உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த 4 கட்சிகளின் தலைவர்களில் ஒருவரே எதிர் கட்சித் தலைவராக வரமுடியும். அந்த வகையில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் தழிர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது. நாடாளுமன்ற சிறப்புரிமையினையும், இனவாதம் என்கின்ற சக்தி தடுக்கின்றது. நாடாளுமன்ற சபாநாயகருக்குள்ளும் இனவாதம் புகுந்துள்ளது. அதனால்தான் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை அவரால் அறிவிக்க முடியாமலுள்ளது. இச்செயற்பாடுகள் நாடாளுமன்ற நடைமுறைக்கு இல்லாத விடையங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே இவற்றை தமிழ் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டும்.
தமிழ் மக்கள் கலை, கலாசராம், பண்பாட்டு விடையங்களை பேணி வருவது போன்று எமது இனம், நிலம் சார்ந்த விடையங்களிலும் அதிக அக்கறையுடனான ஈடுபாட்டை மேலோங்கச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்னுமொரு இனத்தின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழவேண்டி ஏற்பட்டுவிடும்.
கிழக்கு மாகாணத்திலே 41.53 வீதமானர்கள் தமிழர்கள் இருக்கின்றார்கள், 39.39 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களும், அடுத்த நிலையில்தான் சிங்கள மக்களும் உள்ளார்கள்.
ஆனால் கிழக்கில் 41 வீதமான மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களும், 39 சத வீதமானர்கள் தமிழ் மாணவர்களும், இவற்றினைவிடக் குறைவான மாணவர்கள் சிங்கள மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.
இவற்றினை விடமட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள், இருந்தாலும் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைந்து கொண்டு செல்கின்றது. இவற்றில் எமது சமூக மட்ட அமைப்புக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
இவை ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் இராணுவ மயமாக்ல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் இடமபெற்று வருகின்றன. குறிப்பாக பட்டிப்பளைப் பிரதேசத்தின் கெவுளியாமடு போன்ற பகுதிகளிலே இவை இடம்பெற்று வருகின்றன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட்டிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று வியாழக்கிழமை (16) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு என்பது வழுக்குமரத்தில் ஏறுவது போன்று இன்னும் தீர்வு எட்டப் படாமலுள்ளது. இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்காக வேண்டி தமிழ் மக்கள் பல இழப்புக்களை தொடர்ந்தும் இழந்து கொண்டுதான் கிருக்கின்றார்களே தவிர இன்னும் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை.
கடந்த 65 வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பணியும் உர்வதும், தாழ்வதுமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியினை மேற்கொள்ள வேண்டுமாயின் எமது தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ் தமிழ் தேசியத்தின் பால் அணிதிரழ வேண்டும். அவ்வாறு அணிதிரழும் பட்சத்தில் அது தமிழர்கழுக்குரிய தீர்வுக்கு இட்டுச் செல்லும்.
தற்போது நாடாளுமன்றத்தில் நிலவுகின்ற எதிர்க் கட்சித் தலைவர் பிரச்சனை ஒரு இன முரண்பாட்டை உண்டுபண்ணுகின்ற, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக வரக்கூடாது என்ற விதத்தில் இலங்கை செயற்பாடுகள்; சென்று கொண்டிருக்கின்ற இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் தருவதற்கு பல முரண்பட்ட கருத்துக்களும், வந்த வண்ணமுள்ளன.
இலங்கை நாடாளுமன்றில் பொதுஜன ஐக்கியமுன்னி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிப்பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 4 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளே 225 உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த 4 கட்சிகளின் தலைவர்களில் ஒருவரே எதிர் கட்சித் தலைவராக வரமுடியும். அந்த வகையில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் தழிர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது. நாடாளுமன்ற சிறப்புரிமையினையும், இனவாதம் என்கின்ற சக்தி தடுக்கின்றது. நாடாளுமன்ற சபாநாயகருக்குள்ளும் இனவாதம் புகுந்துள்ளது. அதனால்தான் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை அவரால் அறிவிக்க முடியாமலுள்ளது. இச்செயற்பாடுகள் நாடாளுமன்ற நடைமுறைக்கு இல்லாத விடையங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே இவற்றை தமிழ் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டும்.
தமிழ் மக்கள் கலை, கலாசராம், பண்பாட்டு விடையங்களை பேணி வருவது போன்று எமது இனம், நிலம் சார்ந்த விடையங்களிலும் அதிக அக்கறையுடனான ஈடுபாட்டை மேலோங்கச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்னுமொரு இனத்தின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழவேண்டி ஏற்பட்டுவிடும்.
கிழக்கு மாகாணத்திலே 41.53 வீதமானர்கள் தமிழர்கள் இருக்கின்றார்கள், 39.39 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களும், அடுத்த நிலையில்தான் சிங்கள மக்களும் உள்ளார்கள்.
ஆனால் கிழக்கில் 41 வீதமான மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களும், 39 சத வீதமானர்கள் தமிழ் மாணவர்களும், இவற்றினைவிடக் குறைவான மாணவர்கள் சிங்கள மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.
இவற்றினை விடமட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள், இருந்தாலும் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைந்து கொண்டு செல்கின்றது. இவற்றில் எமது சமூக மட்ட அமைப்புக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
இவை ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் இராணுவ மயமாக்ல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் இடமபெற்று வருகின்றன. குறிப்பாக பட்டிப்பளைப் பிரதேசத்தின் கெவுளியாமடு போன்ற பகுதிகளிலே இவை இடம்பெற்று வருகின்றன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட்டிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment