29 Apr 2015

மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு

SHARE
கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு தமிழ் சங்கம் நடாத்திய சிறுவர், கலை, இலக்கிய, பெருவிழா சனி, மற்றும், ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும், (25,26) கொழும்பில் நடைபெற்றது.

இதன் போது கதை, கட்டுரை, கவிதை, வில்லுப்பாட்டு, போன்ற பல துறைகளிலும் பிரகாசித்து பலரின் மனங்களில் இடம்பிடித்த குறிப்பாக சிறுவர்களின் மனங்களில் இடம்பிடித்த மட்டக்களப்பைச் சேர்ந்த மாஸ்டர் சிவலிங்கத்திற்கு “சிறுவர் இலக்கிய செம்மல்” என்ற பட்டம் வழங்கி கொழும்பு தமிழ்ச் சங்கம் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: