13 Apr 2015

கல்விப் பணி செய்யப் பிறந்தவர்கள் பாக்கியவான்கள்.

SHARE
கல்விப் பணி செய்யப் பிறந்தவர்கள் பாக்கியவான்கள், ஆனால் அப்பணியினைச் செய்பவர்கள் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்,  வட மாகாணம் கல்வியிலே பல சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த நிலமை கிழக்கில் வலுப்பெறவேண்டும் முயற்றியும், பயிற்சியும் உடைவோர் உயற்சி அடைவர்.

என கிழக்குமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் நடாத்திய விருதளிப்பு விழா சனிக்கிழமை (11) மட்.குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

எமது பிரதேசத்திலுள்ள பெற்றோர்கள்  தங்களது பிள்ளைகளின் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் காட்டும் அக்கறை கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையிலும், உயர்தரப் பரீட்சையிலும், காட்டுவதில்லை, எனவே இதில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எனவே எமது கல்வி நடைமுறையில் தற்போதைய காலகட்டத்தில் கலைத்துறையில் மாணவர்கள் கற்பதென்பது பொருத்தமானதாக இல்லை, எனவே இதில் பெற்றோர்கள் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும், எதிர் காலத்தில் மாணவர்கள், வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்படம், போன்ற துறைகளில் கற்கவேண்டும். இவற்றினைவிடவும் தொழில் நுட்பக் கல்லரியிலும் பல பாடவிதானங்களைக் கற்று முன்னேறலாம்.

2014 ஆம் அண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தர தாராரண பரீட்சையிலே 48 வீதமான மாணவர்கள் இலங்கயில் கணித பாடத்தில் சித்திபெறத் தவறியிருக்கின்றார்கள். கணித பாடத்தில் சித்திபெறவில்லை என்ற காரணத்தினால் மாணவி ஒருவர் தற்கொலை செதிருந்தார் இதுதான் இன்றய கல்வியின் நிலமை. இவையனைத்தினையும் கருத்திற் கொண்டு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் மாணவர்களைச் சித்தியடைய வைக்க வேண்டும் என்ற துரித நடவடிக்கையை மத்திய அரசிலிருக்கின்ற கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

இவையனைத்திற்கும் மேலாக மாணவர்கள் கற்பதற்குரிய அனைத்து உவப்பான சூழலை உருவாக்க வேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்.

இதுவரையில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின்படி இலங்கையில் இருக்கின்ற 9 மாணகாணங்களிலும் கிழக்கு மாகாணம் 9 வது இடத்திலுள்ளது, கல்விப் பொதுத்தர சாதாரண பரீட்சைப் பெறுபேற்றின் படி கிழக்கு மாகாணம் 5 வது இடம், ஆனால் உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம்  3 வது இடத்தையும் கொண்டுள்ளது. எனவே 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணம் இன்னும் பின்தங்கியிருக்கின்றோம்.

கால்விப் பொதுத்தர சாதாரண பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இலங்கையில் இருக்கின்ற 98 கல்வி வலயங்களிலும் மட்டக்களப்பிலே அமைந்துள்ள மட்டக்களப்பு மத்தி என்கின்ற கல்வி வலயம் தொடர்ந்து 4 வருடங்களாக அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வருகின்றது.  கால்விப் பொதுத்தர சாதாரண பரீட்சை பெறுபேற்றில் இலங்கையிலே  அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறுகின்றவர்களின் வீதம் கிழக்கு மாகாணததில்தான் மிகக் குறைவாகவுள்ளது. இருந்தாலும்கூட கிழக்கு மாகாணம் கல்வியில் அடைந்த முன்நேற்றம் இன்னும் போதுமானதாக இல்லை.

மாணவர்களின் பரீட்சை என்கின்ற சோதனையினை வெற்றிகொண்டு சாதனையாக மாற்றுவதற்கு பொது அமைப்புக்கள், முன்வர வேண்டும். அதனூடாக மாணவர்கள் சாதனை படைக்க உந்து சக்தியளிக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: