நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று தனக்கு எதிராக இலஞ்ச, ஊழல்
ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை வரவேற்பதாகவும், அதற்காக நன்றி
கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (11) புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,
கடந்த 25 வருடங்களாக ஊழல், ஊழல் என்று இவர்கள் சொல்லி வந்தார்கள். அதை உடனடியாக கொடுக்குமாறு நான் ஒரு மாதத்திற்கு முன்பே வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆகவே தங்களிடம் இருந்த ஆவணங்களை ஒப்படைத்திருப்பதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன், நன்றி கூறுகின்றேன்.
மிக விரைவாக நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை சந்தித்து இந்த விடயத்தை துரிதப்படுத்துமாறு வேண்டவுள்ளேன்.
நான் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு இது தொடர்பான உண்மைத் தன்மையை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிட வேண்டுமென்று மிக விரைவில் எனது சட்டத்தரணிகள் சகிதம் சென்று அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்க இருக்கின்றேன்.
ஏதாவது ஒரு சிறிய சதமாவது இலஞ்ச ஊழல் இருக்குமாக இருந்தால் அரசியிலில் இருந்து நான் முற்று முழுதாக விலகுவேன். நாங்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.
எங்களை படைத்த இறைவனுக்கு பயந்துதான் இலஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் இருக்கின்றோமே தவிர, வேறு யாருக்காகவும் இல்லை.
ஆகவே, இவர்கள் இவ்வாறு இன்று ஒப்படைத்துள்ள முறைப்பாட்டையிட்டு சந்தோஷமடைகின்றேன், பாராட்டுகின்றேன்.
மிக விரைவில் நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்று இது தொடர்பிலே விசாரித்து தீர்ப்பை, இது தொடர்பான உண்மை தன்மையை உடனடியாக வழங்குமாறு கேட்க இருக்கின்றேன், என்று தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (11) புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,
கடந்த 25 வருடங்களாக ஊழல், ஊழல் என்று இவர்கள் சொல்லி வந்தார்கள். அதை உடனடியாக கொடுக்குமாறு நான் ஒரு மாதத்திற்கு முன்பே வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆகவே தங்களிடம் இருந்த ஆவணங்களை ஒப்படைத்திருப்பதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன், நன்றி கூறுகின்றேன்.
மிக விரைவாக நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை சந்தித்து இந்த விடயத்தை துரிதப்படுத்துமாறு வேண்டவுள்ளேன்.
நான் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு இது தொடர்பான உண்மைத் தன்மையை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிட வேண்டுமென்று மிக விரைவில் எனது சட்டத்தரணிகள் சகிதம் சென்று அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்க இருக்கின்றேன்.
ஏதாவது ஒரு சிறிய சதமாவது இலஞ்ச ஊழல் இருக்குமாக இருந்தால் அரசியிலில் இருந்து நான் முற்று முழுதாக விலகுவேன். நாங்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.
எங்களை படைத்த இறைவனுக்கு பயந்துதான் இலஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் இருக்கின்றோமே தவிர, வேறு யாருக்காகவும் இல்லை.
ஆகவே, இவர்கள் இவ்வாறு இன்று ஒப்படைத்துள்ள முறைப்பாட்டையிட்டு சந்தோஷமடைகின்றேன், பாராட்டுகின்றேன்.
மிக விரைவில் நான் எனது சட்டத்தரணிகள் சகிதம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்று இது தொடர்பிலே விசாரித்து தீர்ப்பை, இது தொடர்பான உண்மை தன்மையை உடனடியாக வழங்குமாறு கேட்க இருக்கின்றேன், என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment