தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய மகளிர் தின 2015ம் வருடத்தின் நிகழ்வவின் தொனிப்பொருளாக ‘பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” என தமது கட்சியின் தீர்மானத்திற்கமைவாக ஞாயிற்றுக் கிழமை (08) சர்வதேச மகளிர் தினம் அனுஸ்ட்டிக்கப் பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
பெண்களின் வலுவாக்கமே ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்கும், அடையாளத்திற்கும் முக்கியமானதாகும். பெண்களை வலுவானவர்களாக உயர்த்த வேண்டியதும் சமுகத்தின் பொறுப்பாகும் என்பதனை வலியுறுத்தும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் (லேக் வீதி) அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி.செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றதாகவும், அதில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாக சி.சந்திரகாந்தன் மற்றும் உட்பட பலரும் கந்து கொண்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment