7 Feb 2015

அலிசாஹிர் மௌலானா கிழக்கு மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமானம்

SHARE
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா நேற்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டதுடன் அதற்கான நியமனக்கடிதத்தையும் ஆளுநரிடமிருந்து ஆளுநர் செயலகத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து பின்னர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அமீரலியின்  வெற்றிடத்திற்கே கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அலிசாஹிர் மௌலானா 1994 - 2004 ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியதுடன் மக்கள் சேவையில் 35 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக இதன்போது அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: