6 Feb 2015

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

SHARE
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில்  43 வருடங்களின்  பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றது.

பாராளுமன்ற மைதானத்தில்  (04) நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1972ம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற அனைத்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றுள்ளமை ஆரோக்கியமான மாற்றம் என ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்ற காரணியின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: