13 Jan 2015

ஆட்சி மாற்றத்தை சிறப்பிக்கும் முகமாக வந்தாறுமுலையில் கொண்டாட்டம்

SHARE
இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதை சிறப்பிக்கும் முகமாக வந்தாறுமுலை பிரதேசத்தில் மகிழ்ச்சி கொண்டாட்ட விழா அப் பிரதேச மக்களினால் திங்கட்கிழமை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆலய தலைவர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிராம முன்னேற்றச் சங்க உறுப்பினர் எஸ்.செல்வராசா, ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கந்தசாமி ஆகியோருடன் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி தோற்கடிக்கப்பட்மைக்கும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையை கொண்டாடும் முகமாக மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.

இதன் போது மேற்படி ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்றதுடன், பொது மக்களுக்கு பாற் பொங்கல் கொடுத்தும் மக்கள் மகிழ்வை வெளிப்படுத்திமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மட்டுமல்லாது தமிழ் மக்கள் மனதிலும் வாழ்விலும் புதுவித மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது.







SHARE

Author: verified_user

0 Comments: