18 Dec 2014

மழையினால் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன

SHARE
நேற்றும் அதன் முன்தினமும் பெய்த அடைமழை காரணமாக  மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்திலுள்ள சில வீடுக ள்நீரில் மூழ்கியுள்ளது.

இவ்  வீடுகளின் முன்னால் நீர் நிறைந்துள்ள போதும் குடும்பங்கள் ஏதும் இடம் பெயரவில்லை. இந் நீர் தேங்கி நிற்பதன் மூலம் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இந் நீர் வற்றிய பின்னரே தங்களது வளமையான நடவடிக்ககையினை முன்னெடுக்க முடியுமென அக்குடும்பத்தவர்கள்.  தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி பல தடவைகள் பெய்த மழையினால் இவ்வாறான நிலமைகளுக்க  தாங்கள் உட்படுவதனால் சில தெற்று நேய்களுக்கு அஞ்சுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து மட்டக்கள்பபில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 27.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் கூறினார்.







SHARE

Author: verified_user

0 Comments: