மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையிலிருந்து (06) இன்று திங்கட்
கிழமை வரை (08) மூன்று நாட்களாக தெடர் மழை பெய்து வருகின்றது. இதனால்
மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தாழ்வான பல கிராமங்களிலுமுள்ள அனைத்து உள் வீதிகளும் மழை நீரில் மூழகியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட் கிழமை (08) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய மழை வீழ்ச்சியைப் பார்க்கும்போது மட்டக்களப்பு நகரில் 17.2 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், நவகிரி ஆற்றுப் பகுதியில் 65.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், தும்பங்கேணிப் பிரதேசத்தில் 19.8 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், வாகனேரிப் பிரதேசத்தில் 7.1 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 53.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 22.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரனை இன்று திங்கட் கிழமை (08) தொடர்பு கொண்டு கேட்டபோது கூறினார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவடத்திலுள்ள உன்னிச்சைக் குளம் 29 அடி நீர் மட்டமும், வாகனேரிக்குளம் 19 அடி 2 இஞ்சி நீர் மட்டமும், தும்பங்கேணிக் குளம் 13 அடி 9 இஞ்சி மட்டமும், கட்டு முறிவுக்குளம் 12 நீர் மட்டமும், உறுகாமக் குளம் 16 அடி ஒரு இஞ்சி நீர் மட்டமும், நவகிரிக்குளம் 31 அடி 4 இஞ்சி நீர் மட்டமும், வெலிக்காக்கண்டிக் குளம் 15 அடி 7 இஞ்சி நீர் மட்டமும், வடமுனைக்குளம் 12 அடி 11 இஞ்சிநீர் மட்டமும், காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழையினால் பாதிப்புக்கள் ஏதும் எற்பட்டுள்ளாதா என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனை தொடர்பு கொண்ட போது..
வெள்ளம் தேங்கி நிற்க முடியாத அளவிற்கு மழை நீர் விரைவாக கடலைச் சென்றடைவதற்காக மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப் பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரையில் எதுவித இடப்பெயர்வகளோ, வெள்ள அபாயங்களோ ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில் தாழ்வான பல கிராமங்களிலுமுள்ள அனைத்து உள் வீதிகளும் மழை நீரில் மூழகியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட் கிழமை (08) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய மழை வீழ்ச்சியைப் பார்க்கும்போது மட்டக்களப்பு நகரில் 17.2 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், நவகிரி ஆற்றுப் பகுதியில் 65.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், தும்பங்கேணிப் பிரதேசத்தில் 19.8 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், வாகனேரிப் பிரதேசத்தில் 7.1 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 53.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 22.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரனை இன்று திங்கட் கிழமை (08) தொடர்பு கொண்டு கேட்டபோது கூறினார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவடத்திலுள்ள உன்னிச்சைக் குளம் 29 அடி நீர் மட்டமும், வாகனேரிக்குளம் 19 அடி 2 இஞ்சி நீர் மட்டமும், தும்பங்கேணிக் குளம் 13 அடி 9 இஞ்சி மட்டமும், கட்டு முறிவுக்குளம் 12 நீர் மட்டமும், உறுகாமக் குளம் 16 அடி ஒரு இஞ்சி நீர் மட்டமும், நவகிரிக்குளம் 31 அடி 4 இஞ்சி நீர் மட்டமும், வெலிக்காக்கண்டிக் குளம் 15 அடி 7 இஞ்சி நீர் மட்டமும், வடமுனைக்குளம் 12 அடி 11 இஞ்சிநீர் மட்டமும், காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழையினால் பாதிப்புக்கள் ஏதும் எற்பட்டுள்ளாதா என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனை தொடர்பு கொண்ட போது..
வெள்ளம் தேங்கி நிற்க முடியாத அளவிற்கு மழை நீர் விரைவாக கடலைச் சென்றடைவதற்காக மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப் பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரையில் எதுவித இடப்பெயர்வகளோ, வெள்ள அபாயங்களோ ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment