25 Dec 2014

வெருகல் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சென்று பார்வையிட்டார்.

SHARE
கடந்த சில தினங்களாக இடை விடாமல் பெய்து வரும் மழை காரணமாக திருக்கோணமலை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால்; பாதிக்கப்பட்டுள்ள மக்களை கிழக்கு மாகாணசபையின் எதிர் கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.தண்டாயுதபாணி, மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் .கு.நாகேஸ்வரன், வெருகல் பிரதேசசபைத் தலைவர் .விஜயகாந்த், மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள் .நாகேஸ்வரன், தமிழ்ச்செல்வன், மூதூர் தொகுதி தமிழரசுக்கட்சிக் கிளைத் தலைவர்.திருச்செல்வம், சேருவில தொகுதி தமிழரசுக்கட்சித் கிளைத் தலைவர்.சுந்தரலிங்கம், 

செயற்பாட்டாளர்.கைலைவாசன் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை. மூதூர், வெருகல் பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டனர்.

 பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும் வேறு பொதுக் கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களது ஏற்பாட்டினால் கிராமசேவை அலுவலர்களினால் வழங்கப்படுகின்றது ..உணவு வழங்கல் ஆரம்பிக்கப்படாத ஓரிரு முகாம்களிலுள்ள மக்களுக்கு விரைவாக ஏற்பாடுகளைச் செய்யும் படி வெருகல் பிரதேச செயலாளரைக் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் உடனடியான நடவடிக்கைகளை எடுத்தார். வெருகல் பிரதேச செயலாளர் எல்லா முகாம்களுக்கும் நேடியாகச் சென்று தேவையான அவசர நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. இவர்கள் பார்வையிட்ட இடங்களில் பாதிக்கபட்டவர்களின் விபரம் பின்வருமாறு அமைகின்றது.

இறால்குழியில் வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன.கங்குவேலி  புளியடிச்சோலை.17 குடும்பங்கள் - பொது இடம் இல்லாததினால் வேறு வீடுகளில் தங்க    வைக்கப்படடுள்ளனர். உணவு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைச்      செய்யும்படியாக கிராமசேவை அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டது. பட்டித்திடல்  17குடும்பங்கள் பொதுக் கட்டிடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.   

உணவு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை கிராமசேவையாளர் மேற்கொண்டுள்ளார். முத்துச்சேனை அ.த.க. பாடசாலையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 42பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் முகாமில் தங்கி நிற்கினறனர். முத்துச்சேனை, இலங்கைத் துறைமுகத்தூவாரம், வெருகல்முகத்தூவாரம் ஆகிய கிராமங்கள் வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

குழுவினர் படகு மூலமே இக்கிராமங்களுக்குச் சென்றனர் புன்னையடி  அ.த.க பாடசாலையில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 125பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமைத்த உணவு வழங்கப்படுகிறது. 
இலங்கைத்துறைமுகத்தூவாரம்  முன்பள்ளியில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.             

இலங்கைத்துறைமுகத்தூவாரம்  கனிட்ட பாடசாலைகளில் 34 குடும்பங்களைச்  சேர்ந்த 111பேர் தங்கியுள்ளனர். இவர்களைப் பதிவுசெய்து உணவு வழங்க ஏற்பாடு செய்யும்படி வெருகல் பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

பிரதேச செயலாளர் உடனடி நடவடிக்கை எடுத்தார்.மாவடிச்சேனை   அ.த.க. பாடசாலையில் 82குடும்பங்களைச்  சேர்ந்த 256 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமைத்த உணவு வழங்கப்படுகிறது.காவல் கடமைக்காக இரானுவத்தினரும் இம்முகாமில் உள்ளனர். திருக்கோணமலை மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து வள்ளம் பாய்வதனால்  டிரக்டர் ஒன்றிலேயே குழுவினர் இம்முகாமிற்குச் சென்றனர்.தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயத்தில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 467 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில்தான் அதிகம் பேர் தங்கியுள்ளனர். சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. காவல் கடமையில் இரானுவத்தினரும் உள்ளனர். வட்டவான் கிராமம் வெள்ளம் பாய்ந்தோடுவதனால் பிரதான வீதியிலிருந்து இக்கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.  டிரக்டர் மூலமே முகாமிற்கு குழுவினர் சென்றனர்.

.பிரதேச செயலாளர் அலுவலகத்தினால் வழங்கப்படும் உலர் உணவுகளைக் கொண்டு முகாம்களிலேயே மக்கள் பொதுவான அடிப்படையில் சமைக்கின்றனர்.வெள்ளம் வழிந்தோடிய பின்னர் இம்மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது  பின்வரும் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்வர். உணவு கழிப்பறை உட்பட்ட சுகாதாரத் தேவைகள். வெள்ளநீர் உட்புகுந்தமையால் வீடுகளில் ஏற்பட்டிருக்கும்  பாதிப்புக்களைத் திருத்தம் செய்தல். பிள்ளைகளின் புத்தகங்கள் உட்பட்ட கல்வி உபகரணங்களின் தேவை. இப்பிரச்சனைகளை எதிர்க்கொள்ளத் தேவையான நிதிவசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. 







SHARE

Author: verified_user

0 Comments: