19 Dec 2014

ஏறாவூர் நகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம் நிறைவேற்றம்

SHARE
ஏறாவூர் நகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான  வரவு –செலவுத்திட்டம் அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக  அந்நகரசபைத் தவிசாளர் செய்யித் அலிஸாஹீர் மௌலான தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற மாதாந்த அமர்வில், வரவு செலவுத்திட்டத்துக்கு  அனைத்து உறுப்பினர்களும் தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

வரவு -செலவுத்திட்டத்தை முன்மொழிந்து ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா உரையாற்றினார். இதையடுத்து, உறுப்பினர் ஐ.ஏ.வாசித் பிரேரிக்க உறுப்பினர் பி.எம்.ஏ.அமீன் இஸ்ஸத் ஆஸாத் வழிமொழிந்தார்.

இதன் பிரகாரம் 2015ஆம் ஆண்டுக்கான வருமானம் 7 கோடியே 83 இலட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். செலவினம் 7 கோடியே 83 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனடிப்படையில் 1,500 ரூபாய் மிகை வருமானமாக கொள்ளப்படுகிறது.

ஏறாவூர் நகரசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்; இருவரும் சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். (tm)
SHARE

Author: verified_user

0 Comments: