27 Nov 2014

திவிநெகும பயனாளிகளுக்கு வழங்கப்படும் 2500ரூபாய் கொடுப்பணவை துரிதப்படுத்தவும்

SHARE
திவிநெகும பயனாளிகளுக்கு வழங்கப்படும் 2500ரூபாய் கொடுப்பணவை துரிதப்படுத்துமாறும் பொருத்தமான அனைவருக்கும் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அம்பாறை மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் ஐ.அலியார் ஆலோசனை வழங்கினார்.

அம்பாறை மாவட்டத்தில், திவிநெகும வங்கிகளின் கள ஆய்வு வியாழக்கிழமை(27) மேற்கொள்ளப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வீடுகளில் காணப்படும் சிறு குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் திவிநெகும திணைக்களத்தால் இப்பணம் வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இருப்பினும் சில பிரதேசங்களில் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் இக்கொடுப்பனவு வழங்கப்பட்;டதன் காரணத்தால்; பணம் கிடைக்கப் பெறாத பயனாளிகள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: