22 Feb 2014

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கிழக்கு பல்கலைக் கழக காட்சிக்கூடம்

SHARE
 (துசாந்தன்)

தமிழர் பாரம்பரியம் கூறும்  கூத்துக்களரி தோரணம் அறிவையும்இதிறனையும் வெளிப்படுத்தும் சுவடுகள் மற்றும் கலைத்திறன் சார்ந்த  பொருட்கள் என்பன  இன்று குளிபாப்பிட்டியில் திறந்து வைக்கப்படவுள்ள இலங்கையில் 8 வது முறை நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக  கிழக்கு பல்கலைக் கழகத்தின் நுண் கலைத்துறை பீடம் தெரிவித்துள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 2014ல் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நுண் கலைத்துறையினரின் சமூக நிலைப்பட்ட மாணவர் மைய கல்வி செயற்பாட்டின் முன்நெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட விடயங்கள் காட்சி கூடமாக தயார் செய்யப்பட்டு வருகின்றது. 

இதனை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்இ விரிவுரையாளர்கள் பாடசாலை மாணவர்கள்இ அதிபர்கள் கலைஞர்கள் அனைவரும் இணைந்து தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர்

இதில் தமிழர் பாரம்பரிய கூத்துக்களரிஇ தோரணம்இ அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும் சுவடுகள் பொருட்கள் என்பன இக்காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி  குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய எனும் இடத்தில் நேற்று (21) வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தகது.




SHARE

Author: verified_user

0 Comments: