27 Feb 2014

திருதாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி

SHARE
(துசாந்தன்)
இன்று இரவு  நாளை 27ஆம் திகதி இரவு இடம்பெறவுள்ள மகாசிவராத்திரி விழா வினை  முன்னிட்டு கொக்கட்டிச்சோலை திருதாந்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை திருதாந்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அன்றயதினம் 04ஜாம பூஜைகள் இடம் பெறவுள்ள. 

அந்த வகையில் 1ம் ஜாம பூசை – மாலை 06மணிக்கும்இ 2ம் ஜாம பூசை - இரவு 11மணிக்கும்இ 3ம் ஜாம பூசை –நள்ளிரவு 02மணிக்கும், 4ம் ஜாம பூசை – அதிகாலை 06மணிக்கும் நடைபெறவுள்ளன.

அன்றயதினம் இரவு மகாசிவராத்திரிவிழாவை சிறப்பிக்கும் முகமாக கலைநிகழ்வுகள்இ பஜனை வழிபாடுகள்இ கரகாட்டம், என்பன ஆலய முன்றலை அலங்கரிக்க உள்ளன.

ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்  ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்(செயலாளர்) இ.சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.





SHARE

Author: verified_user

0 Comments: