26 Jan 2014

மட்டக்களப்பு-களுதாவளை சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் நடாமாடும் சேவை மற்றும் வைத்திய சேவையும்

SHARE
(கமல்)

மட்டக்களப்பு-களுதாவளை சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் நடாமாடும் சேவை மற்றும் வைத்திய சேவையும் நேற்று (25) களுதவனை மட்.சாந்திபுரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

மேற்படி சிவில் அமைப்பின் தலைவர் திசவீரசிங்கம்-பிரமதாச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரெத்நாயக்க, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் குணசிங்கம்-சுகுணன், மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின்போது களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் குடும்ப மற்றும் எல்லைப்பிரச்சனைகள் தொடர்பான பிணக்குகள் விசாரிக்கப் பட்டதோடு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையினரினால் இப்பிரதேசத்தினைச சேர்ந்த நோயளிகளுக்கும் சிகிச்சைகள் அதே இடத்தில் வழங்கப்பட்டன.  














SHARE

Author: verified_user

0 Comments: