26 Jan 2014

மட்.மகிழூர் சரஸ்வதி வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முதலாவது பரிசழிப்பு விழா

SHARE

(சக்தி)
மட்.மகிழூர் சரஸ்வதி வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முதலாவது பரிசழிப்பு விழா ஒன்று நேற்று (25) மகிழூர் முல்லை முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. 

பழயை மாவணர் சங்கத்தலைவர் சி.மேனரூபன் அவர்களின் தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கொவிந்தம் கருணாகரம்(ஜனா), சிறுவர் நன்னடத்தை, அதிகாரி. கிராமசேவை உத்தீயோகஸ்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமாதான நீதவான்கள். பழைய மாணவர்கள் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மகிழூர் கிராமத்திலிருந்து கற்று கடந்த ஆண்டு தமது திறமைகளை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தர சாதாரண பரீட்சை, உயர்தரப் பரீட்சை, விளையாட்டு, போன்ற பலவற்றில் சித்தி பெற்றவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள். புத்தகங்கள், என்பன  50 மணவர்களுக்கு மட்.மகிழூர் சரஸ்வதி வித்தியாலய பழைய மாணவர்களினால் பரிசாக வழங்கப் படடமை குறிப்பிடத்தக்கதாகும்.  














 

SHARE

Author: verified_user

0 Comments: