6 Oct 2012

கொக்கட்டிச் சோலையில் சிறுவர்தினம்

SHARE


சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை (06.10.2012) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தேன்றீஸ்வரர் ஆலய முன்றலில் பட்டிப்பளை பிரதேச சபை, பட்டிப்பளை பிரதேச செயலகம், மற்றும் வேள்விஷன் அமைப்பும் சேர்ந்து பட்டிப்பளை பிரதேச சிறுவர் கழகங்களை ஒன்றிணைத்து சிறுவர் தினத்தினை கொண்டியது.
இந்நிகழ்வில் பட்டிப்பளை பதில்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம்,உட்பட பிரதேச சபை மற்றும்  வேள்விஷன் அமைப்பின் உத்தயோகஸ்தர்கள் பிரதேச சிறுவர்கழகங்கள் , பொலிஸ் உத்தயோகஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை காலசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சிறுவர் உரிமையினைப் பாதுக்க வேண்டியதும் சிறுவர் உரிமையினைப் பேணவேண்டியதுமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் சிறுவர்கள் ஏந்தியவாறு இன்றய சிறுவர் தின நிகழ்வை கொண்டாடினர்.





SHARE

Author: verified_user

0 Comments: