21 Sept 2012

நினைவுப் போருரை

SHARE
இலக்கிய கலாநிதி அமரர் வ.சிவசுப்பிரமணியம் அவர்களின் முதலாவது வருட நினைவுப் போருரை நாளை காலை (22.09.2012) மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு தமிழ் நாடகமன்ற தலைவர் கதிர்.பாரதிதாசன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் “ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் பார்வையில்” “மட்டக்களப்பு தமிழகம்” எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில் இலக்கிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: