21 Sept 2012

இந்து மதத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதினம்.

SHARE

இந்து மதத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதினத்தினையொட்டி (22.09.2012) நாளை காலை மாபெரும் ஊவலமும் சுவாமி நினைவுப் போருரைக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான திருப்பழுகாமத்திலிருந்து ஒரு பேரணியும் கோவில்போரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரியபோரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலை வந்தடையும்.
பின்னர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் வைத்து சுவாமி விவேகாநத்தரின் திவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளது.
இந்து சேவா சங்கத்தின் மட்டக்ளப்பு கிளையினூடாக மேற்கொள்ளப்படும்  இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள இந்து ஆலய தர்மகத்தாக்கள், பரிபாலன சபையினர், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பெரியார்கள் கல்விமான்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள், என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வில் சிறப்பிக்கவுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: