31 Jan 2021

குடியிருப்புக்குள் புகுந்த அழையா விருந்தாளி;

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளத்தையடுத்து அழையாவிருந்தாளிகள்           மனிதகுடியிருப்பு பிரதேசத்திற்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விருந்தாளியொருவர் மட்டக்களப்பு-  கொம்மாதுறை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு பகுதிக்கு சனிக்கிழமை (30) வருகைதந்ததனால் அப்பிரதேச மக்கள் அச்சம் நிறைந்த பரபரப்படைந்துள்ளனர்

வந்தாறுமூலை வாவியில் காணப்பட்ட சுமார் ஒன்பது அடி நீளமான முதலை கொம்மாதுறை பிரதான வீதியோரமுள்ள பகுதிக்கு வந்தது.

இதையடுத்து அப்பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர்.

வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்                அவ்விடத்திற்கு விரைந்து வருகைதந்து பெரும் பிரயத்தனத்துடன் அந்த முதலையைப் பிடித்து மண்முனை வாவியில் விட்டனர்.

ஏறாவூர்ப் பொலிஸாரும் இங்கு பிரசன்னமாயிருந்ததை             அவதானிக்க முடிந்தது.

 





SHARE

Author: verified_user

0 Comments: