காத்தான்குடியில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிப்பு 3 பிரிவுகள்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்.
கடந்த ஒரு மாதகாலமாய் அமுலில் இருக்கும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலலுள்ள 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்தது.கடந்த 22ம் திகதி 8 கிராம சேவகர் பிரிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.
தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த நிலையில் 167 167E 167 C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தவிர ஏனைய 7 பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை (31) முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதால் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்படிருந்தன.வாகன போக்குவரத்துகளும் இடம்பெற்றன.
விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் பொதுச் சந்தைகள் பாடசாலைகள் மத்ரசாக்கள் பள்ளிவாயல்கள் பாலர் பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்குமெனவும் சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment