மட்டக்களப்பு, காத்தான்குடி பூநொச்சிமுனைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 03 பிள்ளைகளின் தந்தை எம். பதூர்தீன் (வயது 38) என்ற மீனவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜுன் 29, 2016) படகிலிருந்து தவறி கடலில் விழுந்து காணாமல் போயிருந்தார்.
ஆயினும், சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (ஜுலை 04) ஆறு நாட்கள் ஆகின்ற போதும் காணாமல்போன மீனவரின் கதி என்னவென்று இதுவரைத் தெரியவில்லை.
இதனிடையே, மரணித்தவருக்காக நிறைவேற்றப்படும் மார்க்கக் கடமை கடந்த வெள்ளிக்கிழமை (ஜுலை 01, 2016) இந்த மீனவருக்காக நிறைவேற்றப்பட்டு அந்த மீனவரின் மனைவி நான்கு மாதங்கள் 10 நாள் கொண்ட இத்தா (கணவன் இறந்தமைக்காக அந்நிய ஆண்களிடமிருந்து மறைந்து வாழுதல்) கடமையை நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது இரண்டு மீனவர்களுடன் காணாமல் போனவரும் பூநொச்சிமுனை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து குறித்த மீனவர் தவறி விழுந்துள்ளார். தங்களுடன் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்தமை தொடர்பில் பொலிஸாரிடமும் அவரது குடும்பத்துக்கும் கரை திரும்பிய ஏனைய இரண்டு மீனவர்களும் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து,கடற்படையினரின் உதவியுடன் குறித்த மீனவரைத் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்றன. இப்பொழுது தேடுதலும் கைவிடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment