மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பொது அறிவுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி பொது நூலகத்தால் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பொது அறிவுப் போட்டி நடாத்தப்பட்டு வருகிறன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பொது நூலகத்திற்கு கிடைக்கும் பத்திரிகைகளில் இருந்து இரண்டு பொது அறிவுக் கேள்விகள் மாணவர்களால் எழுதப்படும். மாணவர்கள் பத்திரிகைகளை வாசித்து விடைகளை கண்டுபிடித்து எழுதி ஒவ்வொரு மாதம் முடிவிலும் சரியான விடை எழுதியவர்களில் ஐந்து பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் பொது நூலகத்தால் வழங்கப்பட்டு வரப்படுகின்மை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment