வேறுபாடுகளின்னிற மட்டக்களப்பு மாவட்டத்தில்
அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் - மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை ஜனாதிபதியின் விருப்பத்தை போல ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை வேறுபாடு இன்றி எனது காலத்தில் முன்னெடுப்பேன் என அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவிற்கு புதிதாக தலைமைப் பதவியைப் பொறுபபெற்றுள்ள சுனில் ஹந்துந் நெத்தி தெரிவித்துள்ளார்.
மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்திக்கு குழுக் கூட்டம் புதன்கிழமை(11.06.2025) பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
யுத்த காலத்தில் கிழக்கு மாகாண மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனாதிபதியின் இந்த நியமனம் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
கடந்த காலத்தில் நானும் ஆளுநரும் மாவட்டத்தில் தனியா தேர்தல் கால சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். இன்று மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருப்பது நினைத்து பெருமை அடைகிறேன்.
இங்கு சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி, என்பனவற்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை உள்ளது என அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment