திலீபனின் 38வது நினைவேந்தல் மட்டக்களப்பில்
உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், வெள்ளிக்கிழமை(26.09.2025) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.
தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment