மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் அக்ஷய திதியை முன்னிட்டு மிகவும்
ஆர்வத்துடன் புதிய நகைகள் கொள்வனவு.
உலகவால் இந்து மக்கள் புதன்கிழமை(30.04.2025) தமது வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் பெருக வேண்டி தமது வாழ்வில் இடம்பெற வேண்டிய நல்ல சுபகாரியங்களுக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்யும் மிக விசேடதினங்களில் ஒன்றான அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் சகல தங்க நகை விற்பனை நிலையங்களில் மக்கள் வருகை தந்து தமக்கு வேண்டிய நகை கொள்வனவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
புதன்கிழமை காலையிலேயே சகல நகைக்கடைகளும்
மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கும்ப வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்பு தமது
நகை வியாபாரங்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
இன்றைய இந்த விசேட நாளில் நகை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசல்களும் இதன்போது நகைக்கடை உரிமையாளர்களால் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலுமிருந்து மக்கள் இதன்போது மட்டு நகருக்குச் சென்று தமக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
0 Comments:
Post a Comment