இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுடன்
விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள 32 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக செவ்வாய்கிழமை(25.02.2025) நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை
கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாக
இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment