கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற காலநிலையினால் திங்கட்கிழமை மூடப்பட்ட பாடசாலைகள்
மீண்டும் கற்றல் செயற்பாடுகளுக்காக செவ்வாய்கிழமை ஆரம்பம்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரினால் திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் கல்வி அமைச்சினால் மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் கற்றல் செயற்பாடுகளுக்காக காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலையங்களிலும் கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை காலையிலிருந்து மழை சற்று ஓய்ந்திருக்கின்றது. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், உற்சாகத்துடன் பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது. தூர இடங்களுக்கான பாடசாலை பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டதின் படுவான்கரை பகுதியில் சில பாடசாலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மாணவர்களின் வரவு குறைவாக இருந்தது.
திங்கட்கழமை இரவு மாவட்டத்தில் மழை பெய்த போதிலும் செவ்வாய்கிழமை காலையிலிருந்து மழை சற்று தணிந்திருந்த காரணத்தினால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உற்சாகத்துடன் வருகை தந்ததை காணக் கூடியதாக இருந்தது 90 வீதமான மாணவர்களின் வரவு பதிவானதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment