மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒளி விழா.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வருடாந்தம் ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை(18.12.2024) நடைபெற்றது.
இதன்போது குறுமண்வெளி மெதடிஸ்த திருச்சபையின்
சகோதரர் இராமையா ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின்
ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், நத்தார் தாத்தா வருகைதந்து அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி
சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன், அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்
உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment