3 Dec 2024

றொட்டரிக் கழகத்தினால் மற்றுமொரு நிவாரணப் பணி முன்னெடுப்பு.

SHARE

றொட்டரிக் கழகத்தினால் மற்றுமொரு நிவாரணப் பணி முன்னெடுப்பு.

அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையினால் பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்றயதினம் செவ்வாய்க்கிழமை(03.12.2024) மாவட்டத்தில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்புற்ற வெல்லாவெளிப்பிரதேசத்திற்குட்பட்ட பிலாலிவேம்பு கிராம மக்களுக்கு உலர் உணவுகளை வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வைத்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கள் வரும்போது  அதில் பாதிப்புறும் மக்களுக்கு றொட்டரிக் றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையினரால் உதவிகள் வழங்கப்பட்டு வரப்படுவது வழக்கமாகும்.

அதுபோன்றதொரு மனிதாபிமானப் பணியையே அவர்கள் இன்றயத்தினமும் முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது போரதீவுப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன், றொட்டரிக் கழகத்தின் ஆளுநரின் ஆலோசனையின் பெயரில் றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றெட்டரியன் எம்.ஜெககவண்ணன்,  றொட்டரிக் கழகத்தின் செயலாளர் றொட்டரியன் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன், றொட்டரியன் பி.முத்துலிங்கம், றொட்டரியன் ஆர்.தாஸன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு பாதிப்புற்ற மக்களுக்கு உலர் உணவுகளை வழங்கி வைத்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையில் இன்னலுறும் மக்களுக்கு தமது கழகம் முன்னின்று மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுபோல் தற்போது மக்கள் எதிர்கொண்ட வெள்ள அனர்த்திற்கு தம்மதால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு வருவதாக  றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றொட்டரியன் எம்.ஜெகவண்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.

















SHARE

Author: verified_user

0 Comments: