குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை.
யேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட நள்ளிரவு ஆராதனை இன்றைய தினம் (25.12.2024 )
மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை இடம்பெற்றது.
இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன்
ரிச்சட்ஸன்
அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment