24 Oct 2024

கடந்த கால அரசாங்கத்தை மக்களிடம் அதிகமான வரிப்பணத்தை, அறவிடப்பட்டார்கள்.

SHARE

கடந்த கால அரசாங்கத்தை மக்களிடம் அதிகமான வரிப்பணத்தை, அறவிடப்பட்டார்கள்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளை முன்னெடுப்பட்டு வருவதோடு, தேர்தல் பிரசார அலுவலகங்களையும், திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. 

தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி தேர்தல் அலுவலகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறக்கொட்டான்சேனையில் செவ்வாய்க்கிழமை(22.10.2024) மாலை அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர் எஸ்.மேவின் தலைமையில் இடம்பெற்றது.  

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட நிதித்துறை மன்றத்தின் தேசிய குழு உறுப்பினர் கா.திலீப்குமார், கலந்துகொண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பகுதி பொதுமக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான கா.திலிப்குமார். 

கடந்த கால அரசாங்கத்தில் முன்னெடுத்தவர்களின் தேவைகளுக்காக மக்களிடம் அதிகமான வரிப்பணத்தை, அறவிடப்பட்டு பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் அரசியல் செய்வது தேர்தல் காலங்களில் மாத்திரம்தான். மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் கலாசாரங்களைத்தான் அவர்கள் கடந்த காலத்தில் முன்னெடுத்து வந்தனர். அவர்கள் தேர்தல் பணிகளை முன்னெடுத்தபின்பு அவர்களைச் சந்திப்பது என்றால் ஐந்து வருடங்களின் பின்தான் பொதுமக்களிடம் மீண்டும் வருவார்கள். 

நமது கட்சி அவ்வாறாக தேர்தல் அரசியல்களுக்காக முன்னெடுப்பதில்லை. நாம்  மக்களுக்காக சமூக அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர்கள். நாம் தேர்தல் அரசியலுக்காக மட்டும் மக்களுடன் இணைந்து பயணிப்பதில்லை.                                    

இடம்பெறவுள்ள இந்த பாராளுமன்ற தேர்தலானது மிகவும் முக்கியமானது பலரது அரசியல் வாழ்வுக்கு ஓய்வினையளித்துள்ள தேர்தல். மக்கள் சிந்தித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.  என  அவர் இதன்போது தெரிவித்தார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: