28 Mar 2024

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் நடைபெற்ற மகளீர்தின கொண்டாட்டம்.

SHARE

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் நடைபெற்ற மகளீர்தின கொண்டாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளீர்தின கொண்டாட்டங்கள் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் அலோசனை, மற்றுமு; வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.மேனகா புவிக்குமார் அவர்களின் நெறிபடுத்தில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை(27.03.2024) இடம்பெற்றது.

இதன்போது பட்டிபளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நான்கு திணைக்கள மகளீர் உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றிய எல்லே விளையாட்டு நிகழ்வு, உள்ளூர் கைப்பணி உற்பத்தி பொருட்களுக்கள் கண்காட்சியும் விற்பனை உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

பிரதேச சுகாதார வைத்திய அதிகார,p பிரதேச வைத்தியசாலை வைத்தியர, மூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர பல உள்ளூர் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த விளையாட்டுப் போட்டியில் பட்டிபளை பிரதேச செயலக மகளீர் அணி முதலாவது இடத்தையும், பிரதேச சபை மகளீர் அணி இரண்டாவது இடத்திதையும் பெற்று கொண்டதுடன் திறமைகளை வெள்ளிக்காட்டிய மகளிருக்கு இதன்போது பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: