13 Mar 2024

உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலம் திறப்பு விழா.

SHARE

உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலம்  திறப்பு விழா.

நீர்ப்பாசன அமைச்சினால் 60 லட்சம் ரூபாய் செலவில் உலக வங்கியின் நிதி உதவி கீழ் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலம்  திறப்பு விழா.

நீர்ப்பாசன அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவி கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலம்  திறப்பு விழா நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் புதன்கிழமை(13.03.2024) இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தார்.

அப்பகுதி விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இப்பாலத்தின் பணிகள் சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் திட்டத்தின் கீழ் இந்த புதிய பாலத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச விவசாயிகளின் அபிவிருத்திக்காக பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த திறப்பு விழா நிகழ்வுக்கு நிற்பாசன திணைக் களத்தின் உயர் அதிகாரிகள், வவுணதிவு பொலிஸ் உயர் அதிகாரி பொதுமக்கள் விவசாயிகள் மண்முனை மேற்கு பிரதேச செயலக உயர் அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















 

SHARE

Author: verified_user

0 Comments: