இணையவழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக்
காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் இடம் பெற்ற
குறித்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும்,
சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனனினால் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக்
காப்புச் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment