1 Feb 2024

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை(01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சினனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்இராசமாணிக்கம் சாணக்கியன்மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம்மற்றும் களுவாஞ்சிகுடி பொலிசார்ஏனைய திணைக்களம்மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள்உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்நெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்மக்களின் கோரிக்கைகள்தேவைகள் குறித்தும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பது தொர்பாகவும் ஆராயப்பட்ட.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மிளகாய்வெங்காயம்வெண்டிகத்தரி உள்ளிட்ட மேட்டுநிலப் பயிற்செய்கையாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல்குளங்களில் அச்சுறுத்தலாகவுள்ள முதலைகளைப் பிடித்தல்கடலில் மீன்கள் களவாடப்படுவதைக் கண்காணித்தல்கடற்கரையில் மணல் அகழ்வதைக் கண்காணித்தல்மற்றும்வீதி அபிவிருத்திபோக்குவரத்துவிவசாயம்கால்நடைவிதி மின்விளக்குள்காணிவீடமைப்புகரையோரம் பேணல்திண்மக்கழிவகற்றுதல்உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.


 

































SHARE

Author: verified_user

0 Comments: